ஆண்டவனின் அற்புத படைப்புக்களைக் காணக் காண ஆனந்தம் ஆயிரம்,
எண்ணிலடங்கா பட்டியலின் சில துளிகளை எழுதிப்பகிர்வதில் ஒரு ஆனந்தம் ,
பெற்றெடுக்கும் வேளையில் பிறந்த குழந்தையின் அழுகையே தாய்க்கு ஆனந்தம்,
பிறந்த குழந்தைக்கு தாயின் அரவணைப்பே ஆனந்தம் .
பிள்ளையின் மழலையும் குறுஞ்சிறுப்பும் பெற்றவர்க்கு ஆனந்தம்
கள்ளமில்லா குழந்தயைக் காண கடவுளுக்கே ஆனந்தம் .
பள்ளி சிறார்க்கு விளையாட்டில் ஆனந்தம் ,
கல்லூரி காளைக்கோ கன்னிப் பெண்ணின் கடை பார்வையே ஆனந்தம்.
திறன் பெற்ற பேச்சாளர்க்கோ மக்களின் கரவொலி ஆனந்தம் ,
அறநெறி செல்லும் பக்தனுக்கோ ஆண்டவன் நாம ஒலியே ஆனந்தம் .
மண்ணில் விளைந்த மரங்களுக்கோ மலர்கள் பூத்தால்ஆனந்தம்,
மண்ணை பொன்னாக்கும் உழவனுக்கு விளைந்த பயிரைக் கண்டால் ஆனந்தம் . வண்ணத்தோகை விரித்தாடும் அழகு மயிலுக்கு வானம் கறுத்தால் ஆனந்தம் , இன்னிசை பாடும் கருங்குயிலுக்கு கதிரவனைக் கண்டால் ஆனந்தம் .
உழைத்து உண்ணும் மனிதனுக்குத் தன் உறுதியை கண்டு ஆனந்தம்,
களைத்துக் கண்ணயரும் தருணத்தில் நிம்மதியான உறக்கமே ஆனந்தம் . இல்லத்தை பேணும் மனைவிக்கு கணவனின் இன்சொல்லேஆனந்தம், இல்லத்தரசியை பேணும் கணவனுக்கு அவளின் புன்னகையே ஆனந்தம் . கடமைகளை முடித்து உடல் தளர்ந்த முதுமையில் ஓய்வு ஆனந்தம் ,
உடனிருக்கும் இனிய நினைவுகளை எண்ணிப்பார்க்கையில் இதயத்திற்கு ஆனந்தம் .
இருக்கும்வரை இனிய வாழ்க்கை வாழும் மனிதனுக்கு பிறப்பே ஆனந்தம் ,
இறுதி நாட்களில் நோயுடுன் போராடும் மனிதனுக்கு மரணமே ஆனந்தம்
No comments:
Post a Comment