கடுகு பொறியும் வேளையில் கவிதை இயற்ற நான் கம்பனுமில்லை ,
அடுக்கு சொற்களால் அலங்காரமாக பாக்கள் இயற்ற பாரதியுமில்லை குமுதினியை கும்பிட்டு அருள் பெற்ற கூத்தனுமில்லை ,
குவலயம் கொண்டாடும் கவி காளிதாசனுமில்லை,
வெண் தாமரை வேணியின் அருள் வேண்டும் பலரில் ஒருத்தி நான் ,
உள்ளத்தில் உதிக்கும் எண்ணச்சிதறல்கள்
வெள்ளைத்தாளில் வெளிப்பட்ட கவிதைத் துளிகள்
No comments:
Post a Comment